பொங்கல் விடுமுறையை கொண்டாட உதகைக்கு வந்த மதுரையை சேர்ந்த 6 பேர், கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். உதகை பேருந்து நிலையம் அருகே நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து நீண்ட தூரம் வாகனம் ஓட்டி வந்ததால் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.




