Oplus_131072
எனக்குள் பூத்த பூக்களை மாலையாக கோர்த்துள்ளேன்..
பிடித்திருந்தால் சூடிக் கொள்ளுங்கள் பிடிக்கவில்லை என்றால் நறுமணத்தை சுவாசித்துக் கொள்ளுங்கள்..
உயிருள்ள மனிதன் ஊமையாக இருக்கிறான்..
உயிரற்ற போன் பேசிக் கொண்டிருக்கிறது..
#இரவில்..
கொட்டி தீர்த்தது கன மழை
தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை….
உடம்புக்கு முடியாத கணவனை திட்டி தீர்த்து விட்டாள் மனைவி.
ஆறுதல் சொல்லி அணைத்துக் கொள்ள ஆள் இல்லாமல் அனாதையானன் கணவன்..
பெண் + மை _பெண்மை
ஆண்+ மை _ ஆண்மை
இரண்டு மையும் சேர்ந்தால்
#தாய்மை.
கண்கள் மூடிய பிறகு
காரியம் நடந்தால் என்ன
நடக்காமலிருந்தால் என்ன
#மரணம்
செருப்புக்கு
உயிர் மட்டும் இருந்திருந்தால் ஒற்றை செருப்பு அனாதையாக இருந்திருக்காது..
பெண்கள் கண்ணுக்கும் தடவும் மையை விட
பேப்பரில் எழுதும் மை அழகு..
அரவணைத்துக் கொள்ள ஆட்கள் மட்டும் இருந்திருந்தால்
மரம் தனியாக இருந்திருக்காது..




