துயரங்களுக்கான விதையினை நாமே தான் தூவி கொள்கிறோம். பலருடைய வாழ்க்கையில் இருள் படர்வதற்கு சரியான மனித உறவுகளை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளாததே காரணமாகிறது…
உறவுகள் சரியான அடிப்படையில் அமையாத போது அவநம்பிக்கை வெகு சுலபத்தில் தோன்றி விடுகிறது மற்றவர்களிடம் நல்லெண்ணத்தை சம்பாதிப்பதை போல் பெரிய சொத்து எதுவும் இல்லை மனிதர்களைப் பற்றி அவநம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டே போனால் எவரிடமும் நம்மால் ஒட்ட முடியாமல் போய்விடும். நெருக்கமானவர்களை ஒவ்வொருவராக விளக்கிக் கொண்டே போனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் தனிமை பெற்று விடுவோம். யாரிடமும் உறவு இல்லாத தனிமையைப் போன்ற சோகம் எதுவும் இல்லை அதனை உணர்ந்துதான் நமது முன்னோர்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றார்கள் துன்பத்தை பலரோடு பகிர்ந்து கொள்ளும் போது அதன் சுமை குறைகிறது இன்பத்தை பகிர்ந்து கொள்ளும் போது அதன் சுவை பெறுகிறது எனவே தான் தனிமைப்பட்டு போகும் போது இரண்டு வித இழப்புகளும் நம்மை ஆளுகிறது ஒன்று துன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாததால் அதன் கணம் மிக அதிகரித்து நம்மை அழுத்துகிறது இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் போவதால் அதன் முழு சுவையினையும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது நம்முடைய வாழ்க்கையில் இருள் கவிழ்ந்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வை நாம் பெற தொடங்குகிறோம் மற்றவர்களோடு நமக்குள்ள தொடர்புகள் ஆரோக்கிய மனப்பான்மையாக அமைய வேண்டும் நல்ல நண்பர்கள் துன்ப காலத்தில் பணம் கொடுத்து உதவாமல் போகலாம் ஆனால் நீங்கள் மனதளர்ச்சி அடையும்போது அவர்கள் அழிக்கின்ற உற்சாகமும் சொல்கின்ற ஆறுதலும் உங்களுக்கு பெரும் பலமாக அமையும் மனம் தளர்ச்சி அடையும் போது மற்றவர்களின் இதமான வார்த்தைகள் தெம்பு ஊட்டுகின்றன மனதளவில் நீங்கள் பலம் அடைகின்ற போது வாழ்க்கை சோதனையில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்கிற நம்பிக்கை ஏற்படும் தனிமை துயரம் அளிப்பதும் பலரோடு சேர்ந்திருந்தால் மகிழ்ச்சி அளிப்பதும் வாழ்க்கையில் அன்றாடம் நாம் பார்க்கக்கூடிய ஒன்றுதான். ஆங்கில அறிஞர் டாக்டர் ஜான்சன் பற்றி சொல்லும் போது உங்கள் நட்பை எப்போதும் சீர்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார் அதாவது நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் அளவில்லா ஆனந்தம் கிடைக்கும் என்கிறார்..!!!