தற்போது ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு என முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு:
ஊர்க்காவல் படை :
தமிழகத்தில் காவல் துறையினருக்குப் பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்கில் அவர்களின் பணி நாட்கள் உயர்த்தப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இழப்பீட்டு தொகை உயர்வு :
இதனை தொடர்ந்து ஊர்க்காவல் படை காவலர்கள் பணியில் மரணம் அடைந்தால் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையானது தற்போது Rs.15000 திலிருந்து Rs.1 லட்சமாக உயர்வு.
அத்துடன் காயமடைந்தால் வழங்கப்படும் தொகையானது 10 ஆயிரத்திலிருந்து 50000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




