எந்த வக்கிரமும் இல்லாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை (80’s, 90’s Kids) தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_0

அடிவயிறு நொந்துவிடும் என்று

 

அந்த மூன்று நாட்களும்

 

தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!!

 

 

 

கிணற்றடியில் குளிக்கும் போது

 

யாராவது எட்டிப்பார்த்தால்

 

இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!!

 

 

 

அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!!

 

 

 

பள்ளிக்கு நேரம் சென்றால்

 

தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!!

 

 

 

பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!!

 

 

 

நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில்

 

கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!!

 

 

 

எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!!

 

 

 

பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் ஆண் நட்புகள்!!!

 

 

 

ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்…

 

 

 

எந்த வக்கிரமும் இலாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை

 

(80’s, 90’s Kids) தான்..

Read Previous

2025 ஆம் ஆண்டிற்கான ’வைக்கம் விருது’ அறிவிப்பு..!!

Read Next

டை இல்லாமலே இளநரையை ஈஸியா மறைக்கலாம்.. இந்த 5 டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular