எள்ளை சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா..??

எள்ளை சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக கருப்பு எள்ளில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அதனால் இந்த கருப்பு எள்ளை அப்படியே சாப்பிடாமல் அதை எள்ளுருண்டையாக எப்படி தயார் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாய் நீண்ட நாள் வாழலாம் ,என்று இந்த பதிவில் பாக்கலாம் 1.சிலருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் .அவர்கள் கருப்பு எள்ளை சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கலாம்.
2.இந்த கருப்பு எள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்யும்.
3.நம் உடலில் உள்ள இரத்தக் குழாய்களும், இதயமும் ஆரோக்கியமாக செயல்பட கருப்பு எள் உதவி செய்கின்றன.
4.கருப்பு எள் கால்சியம் சத்துள்ளது .ஒரு கைப்பிடி எள்ளில் ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து அடங்கியுள்ளது.எள்ளுருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
5.முதலில் ஒரு பாத்திரத்தில் எள்ளைப் போட்டு விடவும் .பின்னர் அது நன்றாக பொரியும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.இதன் பின்னர், வேர்க்கடலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
7.பின்னர், மிக்ஸியில் ஆற வைத்துள்ள எள்ளு, வேர்க்கடலையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்வோம்
8.பிறகு, அந்த கலவையுடன் அரை கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
9.அரைத்து வைத்துள்ள கலவையை கையில் லேசாக நெய் விட்டு சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவேண்டும் .
10.இப்போது ஆரோக்கியம் மிகுந்த சுவையான எள்ளு உருண்டை ரெடி

Read Previous

இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க அற்புதமான வழி இதோ..!!

Read Next

மனதை கொல்லும் வரிகள்..!! கண்டிப்பா அனைவரும் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular