ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர், விடுதியில் இருந்த 5 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 260 பேர் பலியாகினர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளது.




