ஒரு கப் பச்சை பயிறு வச்சி ஒரு முறை இப்படி குழம்பு செய்யுங்க ருசி வேற லெவல்ல இருக்கும்..!!

மதிய வேளையில் எப்போதும் சாம்பார் புளி குழம்பு செய்து போரடித்து விட்டதா சற்று சிம்பிலாகவும் அதே சமயம் சுவையாகவும் சாதத்திற்கு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஒரு கப் பச்சை பயிர் இருந்தால் அதைக் கொண்டு கொங்கு நாட்டு ஸ்டைலில் குழம்பு செய்யுங்கள்..

உங்களுக்கு கொங்கு நாட்டு பச்சைப்பயிறு குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா கீழே கொங்கு நாட்டு பச்சை பயிறு குழம்பு ரெசிபியின் எளிய முறை கொடுக்கப்பட்டுள்ளது அதை படித்து செய்து சுவைத்து பாருங்கள்..

தேவையான பொருட்கள் :

* பச்சை பயிறு ஒரு கப்
* தண்ணீர் 4 கப்
* பூண்டு ஐந்து பல்
* தக்காளி ஒரு நறுக்கியது
* பச்சை மிளகாய் இரண்டு
* மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

அரைப்பதற்கு :

* மல்லி ஒரு ஸ்பூன்
* சீரகம் ஒரு ஸ்பூன்
* வரமிளகாய் 3

தாளிப்பதற்கு :

* தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்
* சின்ன வெங்காயம் 20
* கருவேப்பிலை ஒரு கொத்து
* உப்பு தேவைக்கேற்ப
* மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
* கொத்தமல்லி சிறிதளவு.

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பச்சை பயிரை சேர்த்து நிறம் மாற வறுத்து இறக்கி நீரில் இரண்டு முறை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் கழுவிய பச்சைப் பயிரை சேர்த்து அத்துடன் நான்கு கப் நீரை ஊற்ற வேண்டும். அதன் பின் பூண்டு தக்காளி பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து நான்கு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி சாரில் மல்லி, சீரகம் வரமிளகாய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதில் பொடித்த பொடியை சேர்த்து அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கிளரிவிட வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து அதில் உள்ள தாளித்த வைத்த பொருட்களை சேர்த்து கிளற சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சிறிது நீரை ஊற்றி அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக அதில் கொத்தமல்லியை தூவி கிளறி கொதிக்க வைத்து இறக்க வேண்டும் பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்துக்கொண்டு மத்து கொண்டு பச்சை பயிரை நன்கு மசித்து விட்டு அதில் எடுத்து வைத்துள்ள பச்சை நீரை ஊற்றி கிளறினால் சுவையான கொங்கு நாட்டு பச்சை பயிறு குழம்பு தயார்..!!

Read Previous

பஞ்சு போல் இட்லி வேண்டுமா இந்த ஒரு நீரை சேர்த்து பாருங்க இட்டிலி அருமையாக வரும்..!!

Read Next

பனங்கிழங்கு.. பொங்கலுக்கு அதிகமான அளவில் அறுவடை செய்யப்படும் பனங்கிழங்கு பற்றிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular