மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (செப்டம்பர் 18) ஒப்புதல் தெரிவித்தது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
அதில், பாஜகவின் வறட்டு கவுரவத்திற்காகவே இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்ற இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது என்றும் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த, சிக்கலான தேர்தல் முறையை கருத்தில் கொள்ளாத இத்திட்டம் சாத்தியமற்றது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.




