
திமுக அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதையும் பாடி உள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை அருகே உள்ள இடத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உள்ளார். அப்பொழுது நிகழ்ச்சியில் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட வில்லை. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதையும் தனியாக பாடி உள்ளார்.
இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆரவாரம் படுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதுமாய் தனியாய் பாடிய அமைச்சர் பொன்மொழி பற்றி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.