சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் சிரஞ்சீவி, கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 மகன்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




