கட்டிப்பிடிப்பு வைத்தியம் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் மிகவும் ட்ரண்டாகி வருகிறது. பிக் பாஸில் இருந்து நம் அன்றாட வாழ்க்கையிலும் இந்த கட்டிப்பிடிப்பு வைத்தியத்தை பற்றி நாம் பேசி இருப்போம். இந்நிலையில், கட்டிப்பிடிப்பதால் மருத்துவர் ரீதியாக ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு மனிதன் என்பவன் தான் சோர்வுற்று அமரும் நேரத்திலும், மன அலைச்சல் உள்ள நேரத்திலும் ஒருவருடைய அரவணைப்பை விரும்புவது இயல்பான ஒரு செயல் தான். கணவன் மனைவிக்கு இடையே ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அந்த பிரச்சனை கணவனுக்கு வந்தால் மனைவி கட்டிப்பிடித்து சமாதானம் கூறுவார்கள். மனைவிக்கு வந்தால் கணவன் தன் தோளில் சாய்த்து மனைவிக்கு ஆறுதல் கூறுவார்கள். இவ்வாறு கண்டுபிடிப்பதால் அவர்களின் மன அழுத்தம் குறைந்து உடலில் ஆரோக்கியமும் நிகழ்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை நம் இனையோடு மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. குறிப்பாக உங்கள் நண்பர்கள் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி போன்றவர்களோடும் குடும்ப உறுப்பினர்களிடமும் இந்த கட்டிப் பிடி வைத்தியத்தை மேற்கொள்ளலாம். ஏனென்றால் இவ்வாறு செய்தால் அந்த நபரின் மன அழுத்தம் முற்றிலுமாக குறைகிறது இந்த மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து அவர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.




