தேவையான பொருள்: தினை அரிசி ¼ கிலோ கருப்பு எள் 100 கிராம் சுக்கு 50 கிராம் ஏலக்காய் 10 கிராம் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். மேற்சொன்ன அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து, சலித்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் மாவை ஒருடம்ளர் நீரில் கரைத்து, கஞ்சி செய்து சாப்பிட ரத்தக் குறைவினால் உண்டாகும் நோய்கள் விலகும். பற்கள் உறுதியாகும். பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்கும். உடல் வலிகளை நீங்கும்.