
ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி ஒருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளபிரதாப்கரின் தரியாவாத்தியில் பொதுமக்கள் முன்னிலையில் தனது 20 வயதுடைய கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் நிர்வாணமாய் இழுத்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் இந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் இந்த கொடூர தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிய நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் காவல் துறையால் கைது செய்யப்பட் உடுள்ளார். மேலும் அந்த பெண்ணை ஊர்வலமாக இழுத்துச் சென்ற போது கடுமையாக தாக்கியதாகவும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.