கற்பூரவள்ளி சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் கற்பூரவள்ளி மட்டுமல்லாமல் அரைக்கீரையும் மருத்துவ குணங்களை பெற்று உடலை ஆரோக்கியமாக வைக்கிறது..
கற்பூரவள்ளி இது கொடி போல் படரும் வீடுகளில் தொட்டிகளிலும் வளர்க்கலாம். இலை வட்டமாக தடிப்பாக இருக்கும் இறை ஓரத்தில் அரிவாள் வெட்டு போன்று கூறிய முனைகள் இருக்கும் இதன் மேல் சாம்பல் பூத்தது போல் இருக்கும் இதன் இலையை கசக்கினால் கற்பூர வாசனை வீசும், குழந்தைகளுக்கு ஏற்படும் செங்கீரந்திக்கு கற்பூரவள்ளிகளில் பிழிந்து சாறு எடுத்து அதில் குன்றி மணி இலை சாறு வெங்காயச்சாறு ஆகியவற்றை சேர்த்து கலக்கி காலை மாலை கொடுத்து வர நோய் குணமாகும் காசம் இரும்பல் கபம் வாதம் தொடர்பான நோய்கள் ஆகியவற்றிற்கு கற்பூரவள்ளி மருந்தாக பயன்படுகிறது, அரை கீரையின் மருத்துவத்தை தெரிந்து கொள்வோம் : அரைகீரை அரைக்கீரை கிள்ளுக்கீரை என்று இதற்கு மற்ற பெயர்கள் உண்டு. அரைக்கீரையின் குணம் பித்த சுரம் போக்கும், குளிர் காய்ச்சலை குணமாக்கும், உடல் வலிகளை நீக்கும், நீர் கோர்வை, ஜலதோஷம், சன்னி, வாதசுரம், சளி, இரும்பல் ஆகியவற்ற குணமாகும் உடலுக்கு வலுவூட்டும் சூதக சன்னி கோளாறுகளை நீக்கும், ஜீவ சக்தியை பெருக்கும் நரம்புத்தளர்ச்சியை போக்கும், மண்டை பீனிசத்தை நீக்கும், இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடியாகும் இதன் இலையின் மேற்பாகும் பச்சையாகவும் அடிப்பாகம் சிவப்பு நீளமும் கலந்து தங்க நிறமாகவும் காணப்படும் கிளை விட்டு வளரக்கூடியது இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியவை நாள்தோறும் தவறாமல் உண்ணுவதற்கு ஏற்றது, எந்த நோயாளருக்கும் முதல் அரைக்கீரை நான் சத்தான உணவு ஒருவித கெடுதலையும் செய்யாது பிரசிவித்த பெண்களுக்கு மிகவும் ஏற்றது இக்கீரை இதன் விதையும் இரண்டுமே உணவாக பயன்படும் இக்கீரையில் தங்க சத்தும் இரும்பு சத்தும் உள்ளது என்பார்கள் நம் முன்னோர்கள், இக்கீரையை குழம்பு பொரியல் செய்து உண்ணலாம் கீரையை கரியாக்கி உண்ண காய்ச்சல் நடுக்கம் வாத நோய் ஆகியவைகள் நீங்கும், அரைக் கீரையுடன் துவரம் பருப்பை சேர்த்து செய்து சாப்பிட்டால்இருமல் கபம் யாவும் நீங்கும்…!!




