கல்யாண வீடுகளில் ரசம் ருசியாக இருப்பதன் ரகசியம்..
வெறும் வாணலியில் தனியா – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 6 இதழ்கள் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்க வேண்டும்.
அடுத்து வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி – 2, நறுக்கிய பூண்டுப் பல் – ஒன்று, கறிவேப்பிலை இலைகள் 3 சேர்த்து வறுக்கவும்.புளிக்கரைசல் – கால் கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், தேவையான அளவு நீர்விட்டு இரண்டு கொதிவிட்டு கால் கப் வெந்து மசிந்த துவரம்பருப்புக் கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொடித்துவைத்துள்ள பொடியைத் தூவி, இறுதியில் உப்பு சேர்க்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை 3 இதழ்கள் வறுத்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு தூவவும்.




