சென்னை ராமாபுரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த புஷ்பா (37) என்பவர், நேற்று (பிப்.26) காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பாவுக்கும் அவரது உறவினரின் மகனான 34 வயது இளைஞருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் புஷ்பா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




