கவனத்தை சாராயத்தில் காட்டாதீங்க வளர்ச்சியில் காட்டுங்கள்..!! எல். முருகன் ஆவேசம்..!!

தற்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில்  செலுத்தக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உண்மை வெளியே வரவே சிபிஐ விசாரணை கேட்கின்றோம். மரகணம் கள்ள சாராய பலி குறித்து சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது..? இதுவரை விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு ஒரு முடிவு இல்லாமல் சென்று கொண்டுள்ளது. முதலமைச்சர் இந்த சம்பவத்தில் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சொன்னார்கள்.

கள்ளச்சாராயம் சம்பவம்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கள்ளச்சார விவகாரத்தில் முழு பொறுப்பு திமுக அரசாங்கமும் முதலமைச்சரும் தான்  முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் .மதுவிலக்கு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். இது தொடர்பாக மதுவிலக்கு துறை அமைச்சர் விளக்கம் கூட அளிக்கவில்லை.  எனவே கள்ளச்சார விவகாரத்தை சிபிஐ விசாரணை மேற்கொண்டு சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மையும் வெளியே வரும். திமுகவினர் கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில் செலுத்தக்கூடாது”, என மதிய இணைய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

Read Previous

உலகக்கோப்பை டிராபியுடன் தூங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி..!!

Read Next

வீட்டில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் கார் ஓட்டுநர் அதிரடி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular