காதலன் மற்றும் அவரது நண்பர்களின் பாலியல் துன்புறுத்தலை தாங்க முடியாத மாணவி நேற்று முடிந்திடும் தற்கொலைக்கு
முயன்றுள்ளார்…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி தனது காதலன் வம்சியுடன் கடந்த ஒரு வருட காலமாக நெருங்கி பழகி வருகிறார், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வம்சி தன் காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள நண்பர்களின் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார், அவர்களின் அந்தரங்க காட்சிகளை நண்பர்கள் மூன்று பேர் வீடியோ எடுத்துள்ளனர், அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதற்கு காதலன் வம்சையும் உடந்தையாக இருந்துள்ளார், தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த அந்த மாணவி மனவேதனையில் நேற்று முன்தினம் நவம்பர் 18 தற்கொலைக்கு முயன்றுள்ளார், ஆனால் அவரை அவரின் தந்தை காப்பாற்றி நடந்து சம்பவம் குறித்து விசாரித்துள்ளார் அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறினார், அதன் பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான வம்சை மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்…!!




