
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே ராகேஷ் குமார் ஷா மற்றும் நிக்கு குமாரி துபே ஆகியோர் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள லேக் கார்டன் விருந்தினர் மாளிகையில் நேற்று (ஜூலை 03) தங்கினர். அப்போது, நிக்கு குமாரி துபேவை ராகேஷ் குமார் ஷா சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில், காதலி உயிர் பிழைத்த நிலையில் காதலன் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.