காதலை கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

காதலை கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து:

உங்கள் காதலை ஒருவரிடம் கட்டாயப்படுத்துவது அல்லது உங்களை நேசிக்காத ஒருவரை திருமணம் செய்வது மிகவும் ஆபத்தானது. திருமணத்தில் காதல் இல்லாதபோது, ​​​​கல்யாண மோதிரம் ஒரு சிறிய கைவிலங்கு. அதுமட்டுமல்ல உங்கள் திருமணம் சொர்க்கமாக மாறாமல் சிறைச்சாலையாக மாறும்.

நட்புறவின் போது ஒரு பெண்ணைக் காதலிக்காத ஆண், திருமணமான பிறகு அவளைப் கொண்டாடுவது கடினம். நீங்கள் எவ்வளவு அன்பைக் காட்டினாலும் உங்களை ஒருபோதும் நேசிக்காதவர்கள் இருக்கிறார்கள். அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். காதல் ஒரு தேர்வு. யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்.

உங்களுடன் இருக்க தயாராக இல்லாத ஒருவருடன் வாழ்க்கையில் இணைய சண்டையிடாதீர்கள், உங்களைப் பிடிக்காத ஒருவரை நீங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது, அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடாத ஒருவருடன் உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட முடியாது. உன்னை விட்டு ஓடிப்போகும் ஒருவரை துரத்திக்கொண்டே இருக்க முடியாது, உன்னை காதலிக்கவில்லை என்று காட்டும் ஒருவரை நீங்கள் அன்பாகவும் அக்கறையாகவும் வைத்திருக்க முடியாது, அப்படிப்பட்ட ஒருவரை உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

என்னை நம்புங்கள், இது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும். அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும், அதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால், தங்கள் வாழ்நாள் முழுவதையும் உங்களுடன் கழிக்க வேண்டி, பிரார்த்தனை செய்பவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்!

உங்களுடன் உறவில் இருப்பதன் மூலம் அவர்/அவள் உங்களுக்கு ஒரு பெரிய உதவியைச் செய்கிறார் என்று நினைக்கும் ஒருவருக்காக உங்களை ஏன் உங்கள் உணர்வுகளை நீங்கள் கொல்ல வேண்டும்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், நேசிப்பதற்கும், உறக்கமில்லாத இரவுகளில் தவித்திருப்பதற்கும், ஒருவரின் அன்பிற்காக அழுவதற்கும், கெஞ்சுவதற்கும் அவர்கள் தகுதியானவரா? யோசித்து பாருங்கள்.

நீங்கள் ஒரு உறவில் இருக்க வேண்டும், அதில் நீங்கள் நேசிக்கப்படவேண்டும், கொண்டாடப்பபடவேண்டும், மதிக்கப்பபடவேண்டும். உங்கள் வாழ்க்கையிலிருந்து தவறான நபரை நீங்கள் தள்ளிடாத வரை, உங்கள் வாழ்க்கைக்கு சரியான நபரைப் பார்க்க முடியாது.

சில நேரங்களில் நாம் தவறான நபரை நேசிக்கலாம், தவறான காரணங்களுக்காக அழலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சரியான நபரைக் கண்டுபிடிக்க தவறுகள் நமக்கு உதவுகின்றன.

நண்பர்களே,, நண்பிகளே,,
வாழ்வில் உங்களின் மதிப்பை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள். இது உங்களுக்கான பெருமையல்ல, சுயமரியாதை.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..

Read Previous

வாழ்க்கையை ரசிக்க தெரிந்தாலே..எதாகப்பட்டது வந்தாலும்… அதுவும் கடந்து போகும்..!!

Read Next

வெற்றிலையில் இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருக்கிறதா..?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular