
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சித்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி (19). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பார்கவி தனது காதலனுடன் செல்போனில் மெசேஜ் செய்வதை பார்கவியின் சகோதரி கண்டுபிடித்துள்ளார். பெற்றோருக்கு தெரிந்தால் என்ன ஆவது என பயத்தில் இருந்த பார்கவி ஜமாய் உஸ்மானியா ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயிலின் அடியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.