
நம்மில் பல பேர் காலை எழுந்தவுடன் டீயையோ அல்லது காப்பியையோ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு பதிலாக ஒரு டம்ளர் சுடுதண்ணீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காண்போம்.
காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீர் குடித்தால் உணவு குழாயில் இருக்கும் முந்தைய நாள் உணவு எச்சங்கள் அகற்றப்பட்டு நச்சுகள் வெளியேறும். எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தால் செரிமானம் சுலபமாக நடக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த சுடுதண்ணீரை காலை எழுந்ததும் நிச்சயமாக குடிக்கலாம். மேலும் கொழுப்புகளை எரிக்கவும் இது மிகவும் உதவி செய்கிறது. நமது உடலுக்கு தேவையான ph அளவை பராமரிக்க இந்த சுடு தண்ணீர் உதவி செய்யும். அதுமட்டுமில்லாமல் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பொட்டாசியம் வைட்டமின் சி ஆகிய நன்மைகள் நம்மை வந்து சேரும்.