
காலை மடக்கி உட்கார வேண்டும் என முன்னோர்கள் கூறுவதின் உண்மையான காரணம் இதுதான்..!!
முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் ஒன்றுதான் இந்த காலை மடக்கி உட்கார வேண்டும் என்பது. இதற்கு பின்னாடி உள்ள மருத்துவத்தை பற்றி நாம் தற்போது பார்க்கலாம். காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது இடுப்பு பகுதியில் இருந்து மேலே அதிகமாக ரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். இதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகள் ஆகிய சிறுநீரகம் கணையம், நுரையீரல், கண், காது மற்றும் மூளை ஆகியவை இடுப்பின் மேல் பகுதியில் இருப்பதால் இந்த பகுதிக்கு ரத்தம் சென்று நமக்கு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால்தான் சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகம் செல்லாமல் முழு சக்தியையும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று நம்முடைய உறுப்புகள் இயங்கு திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரணத்தையும் நன்றாக நடைபெறுவதற்கு இது உதவுகிறது.