
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தர நாயர் (67) இவர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது கால் தவறி கீழே விழுந்துள்ளார் , இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்