பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையை தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சியுறவும், நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தை தணிக்கும்.சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை – பசியைத்தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்;. பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும். பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும். வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.தும்பை கீரை – அசதி, சோம்பல் நீக்கும்.கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும். முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். தூதுவளை – ஆண்மை தரும். சருமநோய், சளித்தொல்லை நீக்கும். மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும், மூலநோயைக் குணப்படுத்தும்.




