• September 24, 2023

குஜராத் மாநிலத்தில் இரண்டு மூக்குடன் பிறந்த அதிசய குழந்தை..!! ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்..!!

குஜராத் மாநிலத்தில் இரண்டு மூக்குடன் பிறந்த குழந்தை ஆச்சரியத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்ற மக்கள்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது‌‌. அந்த குழந்தையை உறவினர்கள் மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சுபர் காந்தா மாவட்டத்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை இரண்டு மூக்குடன் பிறந்திருக்கிறது.

ஹிம்மத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தரமான சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த குழந்தை குறித்து  கருத்து கூறிய மருத்துவர்கள் 8000 முதல் 15000 குழந்தைகளில் ஒருவருக்கு இப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது குழந்தையின் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிசய குழந்தையை உறவினர்கள் மட்டும் அல்லாமல் அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் மருத்துவமனையில் வந்து வாழ்த்தி செல்கின்றனர்.

Read Previous

அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்திய வடகொரியா..!!

Read Next

சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular