
திருச்சி விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன் உபயதுல்லா (41). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் குடும்பச் செலவுகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த உபயதுல்லா வீட்டு உத்திரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் செஸன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.