குரு பெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஓராண்டுக்கு பிறகு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இன்று மதியம் குரு பகவான் பெயர்ச்சியாகிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடாகும். ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், 5ஆம் பார்வை துலாம் ராசியிலும், 7ஆம் பார்வை தனுசு ராசியிலும், 9ஆம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இதனால் இந்த ராசியினருக்கு யோகம் ஏற்படும்.




