காலம் காலமாக குலதெய்வ வழிபாடு என்பது குடும்பத்தை விருத்தி செய்வதற்கும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதற்கும் மற்றும் நம் நம்பிக்கையாக இருப்பது குலதெய்வ வழிபாடு, அந்த குலதெய்வ கோவிலுக்கு நேரில் சென்று வழிபடும் பொழுதும் நமது குடும்பம் ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் காணப்படும்..
குலதெய்வம் அருளை முழுமையாக பெற வேண்டியவை என்ன என்றால் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி அன்று 9 தேங்காய் எடுத்து உடைத்துக் கொண்டு கண்ணுள்ள மூடியில் நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்தால் அடுத்த வளர்ப்பை பஞ்சமிக்குள் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்கான வேண்டுதல் என்றால் கண்டிப்பாக நிறைவேறும் செய்து பாருங்கள், அதேபோல் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்பு வீட்டில் விளக்கு போட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதன் மூலம் கோவிலில் கிடைக்கக்கூடிய அனைத்து நல்ல சக்திகளும் நம் வீட்டில் குடிபுகும், மேலும் குலதெய்வ கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விலகி குடும்பம் செழிப்பாக காணப்படும்..!!




