வெற்றிலையில் இருக்கும் பண்புகள் இந்த பச்சை இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பூஞ்சை எதிர்ப்பு அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற நேற்று பண்புகள் நிறைந்துள்ளது. குளிர்காலத்தில் உணவில் வெற்றிலையை சேர்த்துக் கொள்வது நன்மை தரும்..
சில சமயங்களில் குளிர்காலத்தில் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும் அப்படிப்பட்ட நிலையில் வெற்றிலையை கசாயம் செய்து குடித்தால் சுவாசம் நன்றாக இருக்கும். குளிர்காலத்தில் வரட்டு இரும்பல் தொந்தரவு இருந்தால் வெற்றிலை சாப்பிடலாம் இது மார்பில் உள்ள சளி அகற்ற உதவும். வெற்றிலையில் உள்ள சத்துக்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மேலும் இதனை உட்கொள்வதால் நுரையீரல் வீக்கத்தை குறைக்கலாம். குளிர்காலத்தில் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில் வெற்றிலையை உட்கொள்வது நல்ல செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது. வெற்றிலை உட்கொள்வதால் சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் இதனுடன் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த பச்சை இலைகளில் உள்ள பண்புகள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைத்து உதவுகிறது வெற்றிலை உட்கொள்வதால் மனம் மிகவும் நிம்மதியாக இருக்கும். உடல் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் கலந்து யோசித்து பின்னரே இந்த கலவையை உட்கொள்ள வேண்டும்..!!