நம் வீட்டில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றுதான் குளிர்சாதன பெட்டி. இல்லத்தரசிகளுக்கு மிக முக்கியமான பொருள் என்றே கூறலாம். என்னதான் குளிர்சாதன பெட்டி உணவு சேமிக்க பயன்பட்டாலும் சமீபத்திய காலங்களில் இது வெடித்து சிதறி உயிருக்கே ஆபத்தாகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த குளிர்சாதன பெட்டி ஏன் வெடிக்கிறது அதற்கு மேல் துணி, பொருட்கள் போன்றவை வைக்கலாமா என்பதை பற்றி இனி காண்போம்.
சரியான காற்றோட்டமின்மை கம்ப்ரஸரில் அதிகப்படியான சூடு ஆகிய காரணங்களால் ஃப்ரிட்ஜ் வெடிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தவிர சில பேரின் வீடுகளில் பிரிட்ஜுக்கு மேலே ஒரு கவர் மாதிரி ஒன்று போட்டுவிட்டு அதற்கு மேல் ஏகப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இந்த மாதிரி ஃப்ரிட்ஜின் மீது கவர் அல்லது துணி போடுவதும் பொருட்களை வைப்பதும் தவறு என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஏனென்றால் குளிர்சாதனப்பெட்டியின் முன்பக்க கதவை விடவும் சைடு பகுதி மேற்பகுதி இரண்டும் அதிக சூடாக இருக்குமாம். அதிகப்படியான சூடு இந்த வழியாகத்தான் வெளியேறுமாம். அதனால் மேலே ஃப்ரிட்ஜில் சூடு வெளியேறினால் தான் அது பாதுகாப்பாக இயங்கும் என்பதால் அதில் ஏதும் போட வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஒரு சில பொருட்களையும் குளிர்சாதன பெட்டியின் மேலே வைப்பதை தவிர்க்க வேண்டும்.
கண்ணாடி பாட்டில்கள், காய்கறி அல்லது பழங்கள், வீடு சுத்தப்படுத்த பயன்படுத்தும் கெமிக்கல்கள், பிளாஸ்டிக் ஜார்கள், ஆல்கஹால் போன்ற திரவங்கள் மற்ற வீட்டு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களான கிரைண்டர் ஜூஸர் போன்றவைகள் ஆகியவற்றை பிரிட்ஜின் மேற்பகுதியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இது தவிர மருந்துகள் பாக்கெட்டில் அரைக்கப்பட்ட உணவுகள் ஆகியாவற்றை ஃப்ரிட்ஜின் மேற்பரப்பில் வைப்பதை தவிர்க்க வேண்டும். கூடிய மட்டும் ஃப்ரிட்ஜின் மேற்பரப்பை காலியாக வைத்து விட வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான சூடு வெளியேறினால் தான் குளிர்சாதன பெட்டி வெடிப்பிலிருந்து தவிர்க்கலாம்.




