தேவையான பொருள்: வல்லாரைக்கீரை ஒரு கப் கறிவேப்பிலை கால் கப் கொள்ளு கால் கப் உளுந்தம் பருப்பு 3 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் 7 பெருங்காயத்தூள் சிறிதளவு சீரகம் கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.