• September 24, 2023

குழந்தையின் டயப்பரில் மறைத்து வைத்த இரண்டு கிலோ தங்கம்..!!

உள் ஆடையிலும் குழந்தையின் டயப்பரிலும் மறைத்து வைத்து சிங்கப்பூர் நாட்டில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு கிலோ தங்கத் தூள்கள்.சிக்கிய இந்திய குடும்பம்

சிங்கப்பூர் நாட்டில் இருந்து மும்பையை நோக்கி பயணம் செய்த இந்திய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து சுமார் 1.05 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ எடை உள்ள 24 காரட் தங்கத் தூளை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் 12 ம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு வந்து இறங்கிய இந்திய குடும்பம் ஒன்று சட்டத்திற்கு புறம்பாக மறைத்து வைக்கப் பட்டு தங்கத்தை எடுத்து வந்திருக்கின்றனர்.

இவர்களை சோதனை செய்த மும்பை விமான நிலைய சுங்கத் துறையினர் இவர்களிடம் இருந்து இரண்டு கிலோ தங்க தூள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த தங்கத் தூள்களை தங்களது உள் ஆடைகளிலும் மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையின் டயப்பரிலும் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read Previous

3 விரல்களுடன் 2 மம்மிகள்..!! மிரள வைக்கும் உண்மை சம்பவம்..!!

Read Next

தந்தையின் மறதியால் தவித்து இறந்த பத்து மாத பிஞ்சு குழந்தை..!! காருக்குள் மூச்சு திணறி கொடூரமாக நிகழ்ந்த மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular