தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் வருபவர்தான் ராஷிக்கண்ணா.
இவர் “இமைக்கா நொடிகள்”, “அடங்கமறு”, அயோக்கியா”, “சங்கத்தமிழன்”, “துக்ளக் தர்பார்” “திரு சிற்றம்பலம்”, “சர்தார்”, “அரண்மனை 4” உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் ரஷிக்கண்ணா தெலுங்கு சினிமாவிலும் முன்னானி நடிகையாக வலம் வருகிறார்.
சினிமா துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருக்கும் இவர் சமீபத்தில் “அரண்மனை 4” திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார். தற்பொழுது இரண்டு இந்தி படங்களை தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் ரஷிக்கண்ணா கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதனுடன் “என் மருமகளால் எங்கள் குடும்பம் இன்னும் அழகாக உள்ளது. இளவரசி வந்திருக்கிறாள்”, என்றும் தெரிவித்துள்ளார்.




