• September 24, 2023

கூலி தொழிலாளி தீடீர் உயிரிழப்பு..!!

ரிஷிவந்தியம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் சம்பத் (வயது 35). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பகண்டை கூட்டுரோடு அடுத்த பழைய சிறுவங்கூரில் நடைபெறும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார். மறுநாள் காலையில் சம்பத் மயங்கிய நிலையில் கிடந்ததாக தொிகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு..!!

Read Next

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular