
நம் வீட்டின் அன்றாட தேவையில் இல்லத்தரசிகள் சமையல் செய்வதுற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கேஸ் சிலிண்டர் உள்ளது. கச்சா எண்ணெயின் விலையை பொறுத்தே,எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகிறது . மாதந்தோறும் 1 ம் தேதி கச்சா எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் சென்னையில் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த விலையில் மாற்றம் ஏற்பட்டு புதிய விலை பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிலிண்டரின் விலை பட்டியல்:
வணிக பயன்பாட்டிற்கு உதவியான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு ரூ.1809.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.7.50 காசுகள் உயர்த்தப்பட்டு 1,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல வீட்டு பயன்பாட்டிற்கு உதவியாகும் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.ஆகையால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.