
கொத்தமல்லி விதையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது அவை அனைத்தையும் எப்படி சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் விவரித்துள்ளார்…
கொத்தமல்லி இலைகளும் விதைகளும் இல்லாமல் அன்றாட சமையல் நிறைவு பெறுவதில்லை உலகின் பழமையான நறுமணப் பொருளாக கொத்தமல்லி விதைகள் இன்றும் இருந்து வருகிறது. இவை ஏறத்தாழ 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் கொத்தமல்லி குறித்து பழமையான மருத்துவ குறிப்புகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்தமல்லி விதைகளை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அதனை வடிகட்டி நீரை மட்டும் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலில் வரும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது மேலும் இதில் இருக்கும் லினா டோல் என்ற வேதிப்பொருள் இதயத்திற்கு நல்ல பலனை தருவதாகவும் கூறினார் இவை கெட்ட கொழுப்புகளை குறித்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது மேலும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவி செய்கிறது. மாரடைப்பை தடுக்கக்கூடிய ஆற்றல் கொத்தமல்லியில் இருக்கும் இந்த மூலக்கூருக்கு உள்ளது எனவே கொத்தமல்லி நம் அன்றாட உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது ஆனால் தாதுக்கள் இதில் குறைவாக இருக்கிறது மறுபுறம் கொத்தமல்லி விதைகளில் வைட்டமின்கள் குறைவாகவும் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கிறது வைட்டமின் ஏசி மற்றும் கே ஆகியவற்றை கொத்தமல்லி இலைகளில் இருக்கிறது கொத்தமல்லி விதைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மேலும் கால்சியம் மெக்னீசியம் இரும்புச்சத்து போன்றவையும் இதில் நிறைந்து காணப்படுகிறது இது தவிர செலினியம் பொட்டாசியம் சிங் ஆகியவையும் இதில் காணப்படுகிறது அதன்படி கொத்தமல்லி விதைகளை வயதானவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்..
எனினும் சருமம் விரைவில் வயதான தோற்றம் அடைவதை கொத்தமல்லி இலைகள் தடுக்கிறது ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும் பண்புகள் கொத்தமல்லிக்கு இருக்கிறது இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்து கொத்தமல்லியை நாம் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்..!!