
கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தினால் குழந்தைகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வருகிறது. இதற்கு செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பதில் அளித்தும் உள்ளார்.
அதாவது பள்ளிகள் விடுமுறைக்கு பிறகு எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் ஒருவேளை மே மாதம் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தால் அதற்கேற்றபடி பள்ளியின் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பள்ளிகளில் அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் இதற்காக தனியே ஒரு ஆணையம் அமைத்து 2009 முதல் செயல்பட்டு வருவதாகவும் அப்படி ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணங்களை அதிகமாக வசூலித்தால் அவர்களின் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.