கோயம்புத்தூரில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்..!! ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த நீதிபதி..!!

கோவையில் தனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம்.

கோயம்புத்தூர் ஆர் எஸ் புரம் லைட் ஹவுஸ் சாலையில் வசித்து வந்தவர் தான் செல்வராஜ். இவருக்கு வயது 55. மேலும் இவருக்கு தீப் ஸ்வரூப் என்னும் மகன் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகின்ற காரணத்தினால் செல்வராஜின் மனைவி அவருடன் அமெரிக்காவில் இருக்கிறார்.

வீட்டில் தந்தை மகன் இருவர் மட்டுமே இருந்து வந்த வேலையில் தனது மகனின் குடிப்பழக்கத்தால் தந்தை அடிக்கடி மகனிடம் தகராறில் ஈடுபட்டு வருவார். மேலும் 2018- ஆம் வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி தனது மகனை வேலைக்கு போக சொல்லி தந்தை கேட்டபோது ஆத்திரத்தில் மகன் கத்தியை எடுத்து தந்தையை  குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்துவிட்டார்.

இந்த வழக்கு கோயம்புத்தூரில் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இத்தனை நாட்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் இப்போது அந்த மகனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

தமிழகத்தில் பெய்ந்த ஆலங்கட்டி மழை..!! மிகுந்த மகிழ்ச்சியில் மக்கள்..!!

Read Next

தாய்ப்பால் சுரக்க இந்த உணவை சாப்பிடுங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular