கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர். டி மலை அருகே மேல புதுப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (46). கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று தனக்கு சொந்தமான வளர்ப்பு கோழிகள் அருகிலுள்ள போதும் பொண்ணு என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் போதும் பொண்ணுவின் உறவினர்கள் மணிகண்டன், முத்துலட்சுமி ஆகிய மூவரும் தகாத வார்த்தையில் பேசி அடித்து காயப்படுத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி குளித்தலை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றார். தோகைமலை போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.