1.கோவிலில் தூங்க கூடாது ..
2.தலையில் துணி ,தொப்பி அணியக்கூடாது …
3.கொடிமரம் , நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது ..
6.குளிக்காமல் கோவில் போகக்கூடாது …
7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக்கூடாது ..
8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது..
9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது …
10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக்கூடாது..
11.படிகளில் உட்காரக்கூடாது .
12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் , பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது .
13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது .
14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது .
15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக்கூடாது .
16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக்கூடாது .
17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..




