
கோவை சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் கோவையில் டிஐஜி- ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அவரது உடலினை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஐஜி தரத்தில் இருக்கும் அதிகாரி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.