
பெங்களூரில் லிவிங் டு கெதர் உறவில் இருந்து காதலியை குக்கர் மூடியால் அடித்தே கொலை செய்த கொடூர காதலன்.
கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவ் மற்றும் தேவி இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் பெங்களூரில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் லிவிங் டு கெதர் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தேவி வேலை செய்யும் இடத்தில் வேறொரு நபருடன் பேசுவது குறித்து ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வைஷ்ணவ் மற்றும் தேவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் கோபம் அடைந்த வைஷ்ணவ் வீட்டில் இருந்த குக்கர் மூடியை எடுத்து தேவியை அடித்தே கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து வைஸ்ணவ் செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
சந்தேகத்தால் காதலியை குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.