
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கேப்டன் மில்லர்” இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுடைய மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
வரலாற்று பின்னணியில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்டா பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சுமார் 90 கோடியை வசூலித்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் இத்திரை படம் பங்கு பெற்றது. அந்த வகையில் அந்த வகையில் லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன் தேசிய விருது விழாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழி திரைப்பட பிரிவில் “கேப்டன் மில்லர்” திரைப்படம் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது- இந்நிலையில் “கேப்டன் மில்லர்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தொடர்ந்து பட குழுவினர் சார்பாக இந்த விருதை சத்யஜோதி நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் பெற்றுக் கொண்டுள்ளார் .சர்வதேச அளவில் முக்கியமான விருதை பெற்ற “கேப்டன் மில்லர்’’ திரைப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளா.ர் மேலும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் தனது வலைதள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியாக தருணத்தை பகிர்ந்து படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.