பலரும் சாப்பிட்ட உணவு செரிக்காமல் இரவு நேரத்தில் தடுமாறுவது வழக்கம், எதார்த்தமாக ஏதோ ஒன்றை சாப்பிட்டால் காலையாக இருக்கட்டும் அல்லது இரவாக இருக்கட்டும் செரிமானம் ஆகாமல் தடுமாறுகின்றனர் அதற்கு உடனடி தீர்வாக இதோ..
மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும், நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு பருக வேண்டும், கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வெண்ணீர் அருந்த வேண்டும், பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும், தேங்காய்ப்பால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும், பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சக்கரை சாப்பிட வேண்டும், பப்பாளி பழம் சாப்பிட்டால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும், மேலும் சாப்பிட்டு சிரிக்காத பட்சத்தில் தண்ணீரில் சிறிது சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வெதுவெதுப்பான உடல் அதனை அருந்தி வந்தால் செரிமானம் ஆகும், மேலும் சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் செரிமானம் ஆகும்..!!




