
நாமக்கல் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரை பின்தொடர்ந்து சென்று கொடுத்தனர். வங்கியில் செலுத்துவதற்காகச் சென்றபோது தவறவிட்டதாக கூறிய முதியவர், பணத்தை எடுத்துக் கொடுத்த உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துவிட்டு மீதியைக் கொடுங்கள் எனக் கூறினார். இதனால், நெகிழ்ந்த மக்கள் முழு பணத்தையும் கொடுத்து முதியவரை அனுப்பி வைத்தனர்.