
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி கோகர்பம் அணையின் ஆபத்தான பகுதிக்கு வந்த நரேந்திரன் என்கின்ற நபர் குதித்து தற்கொலை செய்வது போல பாவனைகளில் ஈடுபட்டு உள்ளார்.
இதனை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் அவரை அங்கிருந்து வரச் சொல்லி அறிவுறுத்திய நிலையில் அவர் தனக்கு சிகரெட் வேண்டும் என்னால் சிகரெட் குடிக்க முடியாமல் இருக்க முடியாது என்று கூறி அடாவடித் தனம் செய்து உள்ளார்.
மேலும், அணையில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார், இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அணையில் குதிக்க இருந்த நரேந்திரனை மீட்டு ஆலோசனை வழங்கிய குடும்பத்திடம் ஒப்படைத்து உள்ளனர்.