சிறையில் இருக்கும் மகனுக்கு தந்தை எழுதிய கடிதம்..!! மகன் செய்த செயல் என்னவென்று தெரியுமா..??

ஒரு வயதானவர் தனியே வாழ்ந்து வந்தார்.

அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. ஒரே மகன் ஆனால் அவன் செய்த ஒரு தவறால் சிறையில் இருந்தான். பெரியவர் தோட்டத்தில் தக்காளி பயிரிடலாம் என்று ஆசை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரால் தோட்டத்தில் குழி வெட்டி சரி செய்ய முடியவில்லை.

மகன் கூட இருந்தால் தோட்டத்தில் வேலை செய்ய உதவியாக இருப்பான் என்று மனம் வருந்தி மகனுக்கு தன் நிலைமை குறித்து சிறைச்சாலைக்கு கடிதம் எழுதினார்.

உடனே அவருக்கு கடிதம் வந்தது. ஐயோ அப்பா தயவு செய்து தோட்டத்தை நோண்டாதீர்கள் அதில் தான் நிறைய பொன்னும் பொருளும் புதைத்து வைத்து இருக்கிறேன் என்று.

கடிதம் கூடவே நிறைய காவல்காரர்களும் வந்தார்கள்! மூன்று நாள் அவர் தோட்டத்தை விடாமல் நோண்டினர்! ஒன்றும் கிடைக்கவில்லை!

எதுவும் சொல்லாமல் காவலர்கள் சென்று விட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து மகனிடம் இருந்து இன்னொரு கடிதம் வந்தது, அப்பா இப்பொழுது நீங்கள் விரும்பியவாறு தக்காளி பயிரிடுங்கள்! நான் இருக்கும் நிலையில் இதை தான் என்னால் செய்ய முடிந்தது என்று எழுதி இருந்தான்.

Read Previous

கண்பார்வை இல்லாத ஒருவர் செய்த செயல் மிகவும் வியப்படைய வைக்கிறது..!! அப்படி என்னதான் செய்தார் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

யார் தடுத்தாலும் என்ன நடந்தாலும் முன்னேறிக்கொண்டே இரு..!! வெற்றி நிச்சயம் கிடைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular