சுடச் சுட ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி..??

Oplus_131072

சுடச் சுட ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் : 500 கிராம்
பெரிய வெங்காயம் : 2 (நறுக்கியது)
தக்காளி : 3 (நறுக்கியது)
தேங்காய் துருவல் : 150 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது : 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலை : 1கப்
சோம்பு : 1 டீஸ்பூன்
கசகசா : 1 டீஸ்பூன்
நெய் : 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் : 3
முந்திரி : 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் : தாளிக்க
மல்லி மற்றும் புதினா இலை : 1 கப்
உப்பு மற்றும் எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

* ஆட்டுக்கால் பாயா செய்யும்போது, இறைச்சியை கூடுதல் அக்கறையுடன் கழுவி, சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
* நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை, தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, 25 நிமிடம் குக்கரில் வேக வைத்து இறக்கவும்.
* பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய், சோம்பு, கசசகா, முந்திரி பருப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து, சூடானதும் தாளிக்க பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
* பின், அதோடு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிவக்க வதக்கவும். இஞ்சி – -பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், புதினா இலை, மல்லி இலை ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
* அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் உப்பு சேர்த்து கிளறவும். பின், வேக வைத்த ஆட்டுக்காலை இத்துடன் சேர்க்கவும்.
* சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். அதன் மீது சிறிதளவு மல்லி மற்றும் புதினா இலைகளை தூவி விடவும். சுவையான ஆட்டுக்கால் பாயா தயார். இடியாப்பம், ஆப்பம், பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 

Read Previous

தஞ்சாவூர் ஸ்பெஷல் உரப்பு அடை செய்வது எப்படி..??

Read Next

குழந்தைகளை மூன்று வயதிலிருந்து மரியாதை பண்புகளுடன் வளர்க்க முத்தான மூன்று வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular